search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை"

    திருப்பத்தூரில் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் குட்ட ப்பனூர் தெருவை சேர்ந்தவர் சரவணன். பாத்திரக்கடை தொழிலாளி. இவருடைய மனைவி ஆர்த்தி. இவர்களது மகள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படிக்கிறாள்.

    நேற்று மதியம் குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதற்காக வீட்டின் கதவை பூட்டாமல் ஆர்த்தி பள்ளிக்கு உணவு எடுத்து சென்றார்.

    வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 7 பவுன் நகை திருடு போயிருந் தது. இதுகுறித்து, திருப்பத்தூர் டவுன் போலீசில் ஆர்த்தி புகார் அளித்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தேனி:

    மார்க்கையன்கோட்டை நாட்டாண்மை வீரணத்தேவர் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது62). கூலிவேலை செய்து வருகிறார். தினமும் பக்கத்தில் உள்ள ஊருக்கு தன் மனைவியுடன் சென்று கூலிவேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அதேபோல் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீடு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 5 பவுன் தங்கசெயின் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

    இதுகுறித்து சின்னமனூர் போலீசில் முருகேசன் அதேபகுதியை சேர்ந்த சுமதி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் தொழிலாளி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி ஏர்போர்ட் குட்டி அம்பலக்காரன்பட்டி மெய்யம்மை நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சத்தியசுந்தரி (வயது 38), கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு சித்தாள் வேலைக்கு சென்றார். பின்னர் மாலை 7 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். 

    வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. பின்னர் வீட்டை சோதனை செய்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருந்துள்ளது. 

    இது குறித்து அவர் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×